Skip to main content

Mundhinam Parthene Song Lyrics From Vaaranam Aayiram

ஹாய் மாலினி... ஐ ஆம் கிருஷ்ணன்...

நான் இதை சொல்லியே ஆகனும்...

நீ அவ்வளவு அழகு...

இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு...

இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க

ஐ-அம் லவ் வித் யு...


முன்தினம் பார்த்தேனே...

பார்த்ததும் தோற்றேனே...

சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...

இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...

எங்குதான் போனேனோ

நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா

ஏக்கத்தில் நான் தேய்வதா

இப்போதே என்னோடு வந்தால் என்ன...

ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

இப்போதே என்னோடு வந்தால் என்ன...

ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... (முன்தினம் பார்த்தேனே...)


(இசை...)


துலாத் தட்டில் உன்னை வைத்து

நிகர் செய்ய பொன்னை வைத்தால்

துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே..


முகம் பார்த்து பேசும் உன்னை

முதல் காதல் சிந்தும் கண்ணை

அணைக்காமல் போவேனோ ஆருயிரே


ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி

புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி

வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி...


முன்தினம் பார்த்தேனே...

பார்த்ததும் தோற்றேனே...

சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே..

இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்..

எங்குதான் போனேனோ...

நாட்களும் வீணானதே...


(இசை...)


கடல் நீரும் பொங்கும் நேரம்

அலைவந்து தீண்டும் தூரம்

மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே


தலை சாய்க்க தோளும் தந்தாய்

விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்

இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே...


பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே...

உயிர் இரண்டும் உராயக்கண்டேன்... நெருங்காமலே...

உனையன்றி எனக்கு ஏது... எதிர்காலமே... 

முன்தினம் பார்த்தேனே...

பார்த்ததும் தோற்றேனே...

சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...

இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...

எங்குதான் போனேனோ

நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா

ஏக்கத்தில் நான் தேய்வதா

இப்போதே என்னோடு வந்தால் என்ன...

ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

இப்போதே என்னோடு வந்தால் என்ன...

ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

Comments

Popular posts from this blog

Devathaiyai Kanden Song Lyrics From Kaadhal Kondein

 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது  அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது தீக்குள்ளே விரல் வைத்தேன்  தனி தீவில் கடை வைத்தேன்  மணல் வீடு கட்டி வைத்தேன்  தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்  தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி  அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்  அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்  அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்  கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே தேவதையை கண்டேன் காதலில் விழுந்த...

Thalli Pogathey Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

 ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஏனோ வானிலை மாறுதே  மணித்துளி போகுதே  மார்பின் வேகம் கூடுதே  மனமோ மையல் கொண்டு வார்த்தை தேடுதே  கண்ணெல்லாம்..  நீயேதான்..  நிற்கின்றாய்..  விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..  இமை மூடிடு என்றேன்..  நகரும்  நொடிகள்  கசையடிப் போலே  முதுகின் மேலே  விழுவதினாலே  வரி வரிக் கவிதை..  எழுதும் வலிகள்  எழுதா மொழிகள்  எனது.. !!  கடல் போல பெரிதாக நீ நின்றாய்..  சிறுவன் நான்  சிறு அலை மட்டும் தான்  பார்க்கிறேன்.. பார்க்கிறேன்.. எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று  ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்  ஓசைகள் இல்லாத இரவே..  ஓ.. நான் மட்டும் தூங்காமல்  ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..  கலாபம்  போலாடும்  கனவில் வாழ்கின்றனே..  கை நீட்டி  உன்னைத் தீண்டவே பார்த்தேன்..  ஏன் அதில் தோற்றேன்.?  ஏன் முதல் முத்தம்  தர தாமதம் ஆகுது.?  தாமரை வேகுது..! ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ...

Pala Palakura Song Lyrics From Ayan

பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா காலங்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா  (இசை...) எட்டித்தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இருபக்கம் கூரிருக்கும் கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும் புலன்களை அடக்கி வைத்தால் தினம் புதுப்புது சுகம் கிடைக்கும் காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ  பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ (இசை...) இதுவரை நெஞ்சிலிருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம் கடிகார முள் தொலைத்து தொடுவ...