Skip to main content

Thalli Pogathey Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

 ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. 


ஏனோ வானிலை மாறுதே 

மணித்துளி போகுதே 

மார்பின் வேகம் கூடுதே 

மனமோ மையல் கொண்டு வார்த்தை தேடுதே 


கண்ணெல்லாம்.. 

நீயேதான்.. 

நிற்கின்றாய்.. 

விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்.. 

இமை மூடிடு என்றேன்.. 


நகரும் 

நொடிகள் 

கசையடிப் போலே 

முதுகின் மேலே 

விழுவதினாலே 

வரி வரிக் கவிதை.. 

எழுதும் வலிகள் 

எழுதா மொழிகள் 

எனது.. !! 


கடல் போல பெரிதாக நீ நின்றாய்.. 

சிறுவன் நான் 

சிறு அலை மட்டும் தான் 

பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..

எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று

நான் வந்து நீராடும் நீரூற்று 


ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் 

ஓசைகள் இல்லாத இரவே.. 

ஓ.. நான் மட்டும் தூங்காமல் 

ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே.. 


கலாபம் 

போலாடும் 

கனவில் வாழ்கின்றனே.. 

கை நீட்டி 

உன்னைத்

தீண்டவே பார்த்தேன்.. 

ஏன் அதில் தோற்றேன்.? 

ஏன் முதல் முத்தம் 

தர தாமதம் ஆகுது.? 

தாமரை வேகுது..!


ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. 

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. 


தள்ளிப் போகாதே.. 

எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.. 

இருவர் இதழும் மலர் எனும் முள்தானே 

(தள்ளிப் போகாதே.. 

எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.. 

இருவர் இதழும் மலர் எனும் முள்தானே ) 


தேகம் தடை இல்லை 

என நானும் 

ஒரு வார்த்தை சொல்கின்றேன்.. 

ஆனால் அது பொய் தான் 

என நீயும் 

அறிவாய் என்கின்றேன்.. 

அருகினில் வா.. 


ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ... 

ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ... 


கனவிலே தெரிந்தாய்.. 

விழித்ததும் ஒளிந்தாய்.. 

கனவினில் தினம் தினம் 

மழைத்துளியாய்ப் பொழிந்தாய்.. 


கண்களில் ஏக்கம்.. 

காதலின் மயக்கம்.. 

ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்.. 


நொடி நொடியாய் நேரம் குறைய.. 

என் காதல் ஆயுள் கறைய.. 

ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட.. 


விதியின் சதி விளையாடுதே.. 

எனை விட்டுப் பிரியாதன்பே.. 

எனை விட்டுப் பிரியாதன்பே.. 


ஏனோ ஏனோ 

ஏனோ ஏனோ 

ஏனோ ஏனோ 

அன்பே.. 

Comments

Popular posts from this blog

Devathaiyai Kanden Song Lyrics From Kaadhal Kondein

 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது  அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது தீக்குள்ளே விரல் வைத்தேன்  தனி தீவில் கடை வைத்தேன்  மணல் வீடு கட்டி வைத்தேன்  தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்  தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி  அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்  அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்  அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்  கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே தேவதையை கண்டேன் காதலில் விழுந்த...

Nenje Ezhu Song Lyrics From Maryan via Mariyaan

ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... இருவர் வானம் வேறென்றாலும் உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் பருவங்கள் உருவம் மாறினாலும் குழந்தை சிரிக்க மறந்தாலும் இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் உன் காதல் அழியாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... அஞ்சாதே துஞ்சாதே இனி என்றும் இல்லை வேதனை புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன்முன் பூமழை எந்நாளும் உன் காதல், இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை...