Skip to main content

Idhuthaanaa Song Lyrics From Saamy

இதுதானா இதுதானா

எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா

இவந்தானா இவந்தானா

மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா


பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக

உனதானேன் நான் உனதானே

திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்

சுகமான ஒரு சுமையானேன்

இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்

நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்


இதுதானா இதுதானா

எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா

இவந்தானா இவந்தானா

மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா


இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்

நாடகம் இனித்திடுமே

ஒளிந்திடும் எனையே உனது விழிகள்

தேடியே அலைந்திடுமே

மாடியின் வளைவினில் என்னை கண்டு பிடிப்பாய்

பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்

விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்

படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்

அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே

வெக்கங்களும் வெட்கப்பட்டு பட்டு ஒளிந்திடுமே


இதுதானா இதுதானா

எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா

இவந்தானா இவந்தானா

மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா


ஞாயிறு மதியம் சமையல் உனது

விரும்பி நீ சமைத்திடுவாய்

வேடிக்கை பார் என என்னை அமர்த்தி

துணிகளும் துவைத்திடுவாய்

ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க

வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க

பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க

இருவரின் உலகமும் இருவரி சுருங்க

மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே

என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே


அஹ ஹாஹஹா.

மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக

உனதானேன் நான் உனதானே

திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்

சுகமான ஒரு சுமையானேன்

இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்

நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்

Comments

Popular posts from this blog

Devathaiyai Kanden Song Lyrics From Kaadhal Kondein

 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது  அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது தீக்குள்ளே விரல் வைத்தேன்  தனி தீவில் கடை வைத்தேன்  மணல் வீடு கட்டி வைத்தேன்  தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்  தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி  அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்  அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்  அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்  கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே தேவதையை கண்டேன் காதலில் விழுந்த...

Thalli Pogathey Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

 ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஏனோ வானிலை மாறுதே  மணித்துளி போகுதே  மார்பின் வேகம் கூடுதே  மனமோ மையல் கொண்டு வார்த்தை தேடுதே  கண்ணெல்லாம்..  நீயேதான்..  நிற்கின்றாய்..  விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..  இமை மூடிடு என்றேன்..  நகரும்  நொடிகள்  கசையடிப் போலே  முதுகின் மேலே  விழுவதினாலே  வரி வரிக் கவிதை..  எழுதும் வலிகள்  எழுதா மொழிகள்  எனது.. !!  கடல் போல பெரிதாக நீ நின்றாய்..  சிறுவன் நான்  சிறு அலை மட்டும் தான்  பார்க்கிறேன்.. பார்க்கிறேன்.. எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று  ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்  ஓசைகள் இல்லாத இரவே..  ஓ.. நான் மட்டும் தூங்காமல்  ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..  கலாபம்  போலாடும்  கனவில் வாழ்கின்றனே..  கை நீட்டி  உன்னைத் தீண்டவே பார்த்தேன்..  ஏன் அதில் தோற்றேன்.?  ஏன் முதல் முத்தம்  தர தாமதம் ஆகுது.?  தாமரை வேகுது..! ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ...

Nenje Ezhu Song Lyrics From Maryan via Mariyaan

ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... இருவர் வானம் வேறென்றாலும் உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் பருவங்கள் உருவம் மாறினாலும் குழந்தை சிரிக்க மறந்தாலும் இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் உன் காதல் அழியாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... அஞ்சாதே துஞ்சாதே இனி என்றும் இல்லை வேதனை புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன்முன் பூமழை எந்நாளும் உன் காதல், இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை...